/* */

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் திறனறி தேர்வு

பதினோராம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் தமிழ் மொழி திறனறி தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் திறனறி தேர்வு
X

பள்ளி மாணவ,மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப் பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று, தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் "திறனறித் தேர்வு" அரசு தேர்வுகள் இயக்ககம் வாயிலாக நடைபெறவுள்ளது

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள்,மாணவிகள் இத்தேர்வினை எழுத 09.09.2022 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும். இத்தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய இத்தேர்வு 01.10.2022 அன்று முற்பகல் 10.00 12.00 வரை நடைபெறும்.

இத்தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இத்தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ,மாணவியர்களுள் 750 அரசு பள்ளி மாணவர்களும், 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் திங்கள்(மாதம்) ஒன்றுக்கு ரூ.1500 என இரண்டு ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படவிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் இத்திறனறித்தேர்வில் பங்கேற்க தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்

Updated On: 7 Sep 2022 2:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’