/* */

சம்பா நெல் பயிர் காப்பீடு உடனடியாக எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் நடவுக்கு வருகின்ற 15 ந்தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள கலெக்டர் தகவல்

HIGHLIGHTS

சம்பா நெல் பயிர் காப்பீடு உடனடியாக எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
X

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் 1 லட்சத்து 6 ஆயிரத்து 335 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் 08.11.2021 வரை 16 ஆயிரத்து 474 விவசாயிகள் 38 ஆயிரத்து 143 ஏக்கர் மட்டுமே திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வயலில் மழை நீர் தேங்கி சம்பா பயிர் சேதமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் வயலில் நீர் தேங்கி சம்பா பயிருக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பயிர் சேதம் ஏற்படின் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிரினை உடனடியாக கடைசி நாள் வரை காத்திருக்காமல், அருகிலுள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் உரிய முன்மொழிவு படிவத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களான சிட்டா, 1431-ஆம் ஆண்டு பசலிக்கான அடங்கல், ஆதார் எண் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் ஆகியவற்றை கொண்டு சென்று திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொண்டு இயற்கை இடர்பாடுகளின் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 10 Nov 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...