/* */

குடியாத்தம் அடுத்த மோர்தானா அருகே கிராமத்தில் நுழைய முயன்ற 7 யானைகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அருகே கிராமத்திற்குள் நுழைய முயன்ற 7 யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்

HIGHLIGHTS

குடியாத்தம் அடுத்த மோர்தானா அருகே கிராமத்தில் நுழைய முயன்ற 7 யானைகள்
X

குடியாத்தம் அடுத்த மோர்தானா அருகே கிராமத்தில் நுழைய முயன்ற யானைகள்

குடியாத்தம் வனச்சரகம் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் வனச்சரகமாக உள்ளது . இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்டவை அதிகளவு உள்ளது. மேலும் ஆந்திர வனப்பகுதியில் யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கு உள்ள யானைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் இரைதேடி தமிழக வனப்பகுதியான குடியாத்தம் வனச் சரகத்திற்குள் நுழைவது வழக்கம் . மேலும் குடியாத்தம் வனப்பகுதியொட்டி உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு பயிரிட்டுள்ள வாழை, நெல், மா உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது .

அதன்படி நேற்று குட்டியுடன் 7 யானைகள் ஆந்திர வனச்சரகத்தில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த யானைகள் குடியாத்தம் அடுத்த மோர்தானா கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் நுழைய முயற்சி செய்துள்ளது. அப்போது ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் காட்டியும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர் .

ஆனால் யானைகள் மீண்டும் மோர்தானா அணைப்பகுதியில் சுற்றி வருகிறது . கிராமத்திற்கு நுழையாதபடி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் .

Updated On: 14 July 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...