/* */

திருத்தணி அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி அருகே ஆந்திராவுக்கு லாரியில் கடத்த இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருத்தணி அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா மற்றும் போலீசார் திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அம்மையார் குப்பத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற மினி லாரியை மடக்கி சோதனை சோதனை செய்ததில். அதில் மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து. ரேசன் அரிசி கடத்தி வந்த லாரி ஓட்டுனர் பள்ளிப்பட்டு அடுத்த பூச்சாலியூர், மாங்காளிபுரம் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி திருத்தணி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 8 April 2022 5:35 AM GMT

Related News