/* */

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   தீக்குளிக்க முயன்ற பெண்
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள புச்சிரெட்டி பள்ளி காலனியில் வசித்து வருபவர் அம்முலு (40). அம்முலு வீட்டின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கடந்த சில மாதங்களாக அவரது வீட்டை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அம்முலுவுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இது சம்பந்தமாக அம்முலு திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். ஆனால் இது சம்பந்தமாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வீட்டை ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த அமுலு நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளே வந்தவுடன் தான் மறைத்துக் கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தன் உடலில் ஊற்றிக் கொண்டு. தீக்குளிக்க முயற்சித்துள்ளார் இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அவர் கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து அவரை சமாதானம் செய்தனர்.

பிறகு அவரை உடனடியாக திருவள்ளூரில் உள்ள நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை செய்து இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 26 April 2022 8:14 AM GMT

Related News