/* */

திருவள்ளூரில் ஒரே நாளில் 695 பேருக்கு கொரோனா: 17 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் ஒரே நாளில் 695 பேருக்கு கொரோனா: 17 பேர் பலி!
X

தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனையடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

இன்று ஒரே நாளில் 695 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1476 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று 17 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6459 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,407 ஆகவும், இதில் 95,504 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1444 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Updated On: 3 Jun 2021 3:00 PM GMT

Related News