/* */

பெரியபாளையம் அருகே ஆறு வழிச்சாலை பணியை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

பெரியபாளையம் அருகே ஆறு வழிச்சாலை பணியை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெரியபாளையம் அருகே ஆறு வழிச்சாலை பணியை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
X

பெரியபாளையம் அருகே ஆறு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக ஆந்திரா மாநிலம் சித்தூர் முதல் தச்சூர் வரையில் சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இணைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள 34 கிராமங்கள் வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில் 1238 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து

பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெரியபாளையம் அருகே வடமதுரை பகுதியில் சாலைப் பணிகளுக்காக அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் சாலை பணிகளுக்காக அலுவலகம் அமைக்கப்படும் இடத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சாலை பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலை ஆணையத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடந்தபோது சாலை பணிகள் நடத்தப்படாது என உறுதியளித்த நிலையில் அதனே மீறி இங்கு அலுவலகம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர். 50 சென்ட், 60 சென்ட் நிலத்தில் முப்போகம் விவசாயம் செய்து வரும் பெண்கள் சாலை பணிக்காக நிலத்தை கையகப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவித்தனர்.

எனவே ஆறு வழி சாலை திட்டத்தை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனிடையே முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் பணிகள் மேற்கொண்டு நடைபெறாது என உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 7 July 2022 9:30 AM GMT

Related News