/* */

பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு: மாணவன் உயிரிழப்பு

அரசு பள்ளியில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு: மாணவன் உயிரிழப்பு
X

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாஸ்கர் என்பவரது மகன் தமிழ்செல்வன். ஆரணியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் இன்று பள்ளிக்கு சென்ற நிலையில் பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே பேனா வாங்குவதில் சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் காயமடைந்த மாணவன் தமிழ்ச்செல்வனை ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மாணவனை தாக்கியவர்கள் மீது காவல்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆரணி அரசு உயர்நிலைப்பள்ளியில் விசாரணை நடத்திய காவல்துறையினர் மாணவர்களிடமும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பள்ளியில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 31 March 2023 5:45 AM GMT

Related News