/* */

உடுமலை பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலை பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
X

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் பரவலை முழுமையாக கட்டுப்படும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலைபேட்டை நகராட்சிக்கு உட்பட பகுதிகளில், தினசரி 50 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடும், அதிகாரிகள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளாலும் இது சாத்தியமாகி இருக்கிறது.

இந்த நிலையில், உடுமலை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. உடுமலை பழைய பஸ் ஸ்டாண்டு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினியை பீய்ச்சி அடித்தனர். நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Updated On: 3 Jun 2021 9:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்