/* */

திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டிய திருடன்: மடக்கி பிடித்த போலீசார்

திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டிய திருடனை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டிய திருடன்:   மடக்கி பிடித்த போலீசார்
X

பைல் படம்.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீஷ்குமார். இவர் திருப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இவர் கார் வாங்குவதற்காக 1.25 லட்சம் ரூபாய் பணத்துடன் உடுமலை செல்ல, அனீஷ்குமார் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டு வந்து தனியார் பஸ்சில் உட்கார்ந்திருந்தார். அப்போது, தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து பணம் கீழே விழுந்ததை பார்த்தபோது, பேண்ட் பாக்கெட் பிளாடால் கிழிக்கப்பட்டு இருந்தது. உடனே அவனை பிடிக்க முயற்சி செய்தபோது, தான் வைத்திருந்த கத்தியை காட்டி திருடன் மிரட்டினான். உடனே அனீஷ்குமார் சத்தம் போட்டார். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விக்னேஸ்வரன், திருடனை மடக்கி பிடித்தார். இதனையடுத்து, மடக்கி பிடிக்கப்பட்ட திருடனை விசாரித்தபோது, மோகனசுந்தரம் என்ற தாடி சுந்தரம் 32, என்பதும் அவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மோகன சுந்தரத்தை, தெற்கு போலீஸார் கைது செய்தனர். திருடனை மடக்கி பிடித்த விக்னேஸ்வரனை, மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையார் ரவி பாராட்டினார்.

Updated On: 10 Sep 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!