/* */

திருப்பூர்: ஓபிஎஸ்., ஆதரவாளர் மாணிக்கம் பாஜக.,வில் ஐக்கியம்

திருப்பூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ்., ஆதரவாளர் மாணிக்கம் பாஜக.,வில் ஐக்கியமானது அதிமுக.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர்: ஓபிஎஸ்., ஆதரவாளர் மாணிக்கம் பாஜக.,வில் ஐக்கியம்
X

திருப்பூரில் நடந்த பாஜக., மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

திருப்பூர் பாஜ., அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டு, பாஜக., புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம் பிடித்து இருந்த மதுரை சோழவந்தான் தொகுதி முன்னாள் ஏம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.

இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாணிக்கம், பாஜகவில் இணைந்தது அதிமுக.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது தவிர, சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ., பழனிசாமி, அமமுக., மாநில அமைப்பு செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட சிலர் பாஜக.,வில் இணைந்தனர்.

Updated On: 24 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...