/* */

மானிய விலை கைத்தறி நுால் யாரிடம் வாங்குவது? நெசவாளர்கள் குழப்பம்

மானிய விலையில் கைத்தறி நுால்கள் வாங்க யாரை அணுகுவது என்று தெரியாமல், பல்லடம் பகுதி நெசவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

மானிய விலை கைத்தறி நுால் யாரிடம் வாங்குவது? நெசவாளர்கள் குழப்பம்
X

நெசவாளர்கள், தாங்களே நேரடியாக பாவு நுால் வாங்கி, நெசவு செய்யும் துணிகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இதுகுறித்த தெளிவான அறிவிப்பு ஏதுமில்லாததால், நெசவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பல்லடம் பகுதி கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: தேசிய கைத்தறி முன்னேற்ற கழகம் மூலம், நெசவாளர்களே நுால்களை நேரடியாக வாங்கும் திட்டத்தை மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. இதில், மானிய விலையில் நூல்களை பெற்று, சொந்தமாக துணி உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம். இதில், 10 சதவீதமாக இருந்த மானியம், 15 சதவீதமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் பயன்பெற, நெசவாளர்களுக்கு, தேசிய கைத்தறி முன்னேற்ற கழகம் மூலம் 'பாஸ்புக்' வழங்கப்பட்டது. ஆனால், இந்த அலுவலகம் எங்கு உள்ளது, நுால் வாங்க யாரை அணுகுவது என்பது உள்ளிட்ட எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதற்காக, அதிகாரிகள் யாரேனும் நியமிக்கப்பட்டுள்ளார்களா, இத்திட்டத்தில் நெசவாளர்கள் யாரும் பயன்பெற்றுள்ளார்களா என்ற எந்த விவரமும் இல்லை. இதுகுறித்து, அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Updated On: 6 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!