/* */

தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி
X

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மக்கள் நீதிமன்றம் குறித்து  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை தவிர்க்கவும், உரிய நேரத்தில் நீதி கிடைக்கவும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் எளிதாக தீர்வு காணவும், லோக் அதலாத் எனப்படும் 'சமரச மக்கள் நீதிமன்றம்' நடத்தப்படுகிறது.

இதுதொடர்பான, கண்காட்சி, பேரணி நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தாராபுரம் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் சம்பந்தமான விழிப்புணர்வுக் ஒலி ஒளி காட்சி காண்பிக்கப்பட்டது.

முன்னதாக, தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தர்மபிரபு, மரக்கன்று நட்டு வைத்தார். பின், மக்கள் செய்தி தொடர்பு வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதில், மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சி.குமார் சரவணன், குற்றவியல் நீதிமன்றம் நடுவர் பாபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வி ஏக்னஸ் ஜெபகிருபா உட்பட, கல்லூரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், போலீசார் பங்கேற்றனர்.

Updated On: 11 April 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!