/* */

நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருப்பூருக்கு வருகை தந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

HIGHLIGHTS

நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று திருப்பூர் வருகை
X

முதல்வர் மு.க. ஸ்டாலின் 

கோவையில் இருந்து இன்று மதியம் 2.20 மணிக்கு திருப்பூருக்கு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், இன்று மாலை நடைபெறும் நிகழ்வில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இவ்விழாவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக, 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 1339 பேருக்கு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நிதியுதவி உள்ளிட்டவற்றை, மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார்.

பின்னர், தெற்கு அவினாசிபாளையம், கே.அய்யம்பாளையம், சின்னேகவுண்டன்பாளையம் துணைமின்நிலையம், புதுராமகிருஷ்ணாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தாராபுரம் கால்நடை மருத்துவமனை பள்ளிக்கட்டிடங்கள் உள்பட ரூ.28 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.

அதேபோல், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களை சந்தித்து பேசுகிறார். அதை தொடர்ந்து இன்று மாலையே, கோவை சென்று சுற்றுலா மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் தங்குகிறார். இதையொட்டி திருப்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 22 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  8. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!