/* */

பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மைய ஒப்பந்தம் திடீர் ரத்து

பிஎஸ்என்எல்., நிறுவனத்தின் தமிழக ம், கேரளா வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்  சேவை மைய ஒப்பந்தம் திடீர் ரத்து
X

பிஎஸ்என்எல் ஊழியர்கள். 

தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தனது வாடிக்கையாளர் சேவை பிரிவை, கார்வி டிஜிகனெக்ட் என்ற தனியார் நிறுவனம் வசம் ஒப்படைத்துள்ளது. கடந்த, 2019ல், திருப்பூர் மாவட்டம், அவிநாசி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், இரு மாநிலங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மையம், தனியார் நிறுவனம் சார்பில் திறக்கப்பட்டது.

தமிழக வாடிக்கையாளர் சேவை பிரிவில், 51 பேர், கேரள பிரிவில், 69 பேர் பணியமர்த்தப்பட்டு, அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். மாதம், 9,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களின் தொலை தொடர்பு சேவை சார்ந்த அழைப்புகளுக்கு, தொலைபேசி வழியாக விளக்கம் அளிக்கும் பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊழியர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில்,'கடந்த பிப்., மாதம் வழங்கப்பட வேண்டி சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. கேரளா, நீலகிரி என, தொலை துாரங்களில் உள்ளவர்களும், இங்கு அறை எடுத்து தங்கி, பணிபுரிந்து வருகிறோம். எங்கள் பணிக்கு, உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். அவர்களது ஸ்டிரைக்கால், வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூடப்பட்டன.

வாடிக்கையாளர் சேவை மையத்தின் நிர்வாக மேலாளர் ஜிஜோ சாஜி, மேலாளர் அஜித்குமார் ஆகியோர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் போட்டிருந்தது. ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பே, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தற்போது ரத்து செய்துவிட்டது. இருப்பினும், வரும் ஜூலை வரை பணியை தொடரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வேறு நிறுவனத்திற்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஒப்பந்தத்தை வழங்க உள்ளதாக தெரிகிறது.

ஒப்பந்தத்தின் போது, பிணைய வைப்பு தொகையாக, ஆக்சிஸ் வங்கியில், எங்கள் நிறுவனம் சார்பில், 5.50 கோடி ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. எங்கள் ஒப்பந்தம் பாதியில் ரத்து செய்யப்பட்டதால், அந்த தொகையை, வங்கியினர் முடக்கி வைத்துள்ளனர். இதுபோன்ற சிக்கலால் தான், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கால தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும், 28ம் தேதி சம்பளம் வழங்கப்பட்டு விடும் என, நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

Updated On: 22 March 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!