Begin typing your search above and press return to search.
பத்திரப்பதிவு அலுவலக முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் பத்திரப்பதிவு அலுவலக முறைகேட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நெருப்பெரிச்சல் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
கோடிக்கணக்கில் பத்திரப்பதிவு ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரியும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரப் பதிவுக்கு வருவோரின் சிரமத்தைப் போக்க இந்த பதிவு அலுவலகத்தை மூன்று பகுதிகளாக பிரித்து அமைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி உட்பட எராளமானோர் கலந்து கொண்டனர்.