/* */

வாணியம்பாடி அருகே தமிழக காவல்துறையினர் அதிரடி சாராய வேட்டை 

வாணியம்பாடி அருகே தமிழக காவல்துறையினர் நடத்திய அதிரடி சாராய வேட்டையில் சாராய ஊறல்கள் மற்றும் மூலப்பொருட்கள் அழிப்பு

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே தமிழக காவல்துறையினர் அதிரடி சாராய வேட்டை 
X

சாராயம் காய்ச்ச பயன்பட்ட அடுப்பை அழித்த காவல்துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொரிபள்ளம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரி டியூப்களில் நிரப்பி கொண்டு இருசக்கர வாகனத்தில் கடத்துவதாக திருப்பத்தூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்பி தனிப்படை உதவி ஆய்வாளர்கள் கணேசன் மற்றும் பிரகாசம் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு கொரிபள்ளம் மலை பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது சாராயம் காய்ச்சவதற்காக வைக்கப்பட்டிருந்த 7000 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 3 அடுப்புகள் சாராயம் காய்ச்சுவதற்காக கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் பைப்புகள், 2 டன் விறகு போன்றவற்றை கைப்பற்றி மலைப்பகுதியில் தீயிட்டு அழித்தனர். தலைமறைவாக உள்ள நடராசன் மற்றும் அன்பரசன் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..

Updated On: 7 Sep 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!