/* */

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பள்ளியில் தங்கியுள்ள குடும்பங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை

வாணியம்பாடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 48 குடும்பங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை குற்றச்சாட்டு

HIGHLIGHTS

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பள்ளியில் தங்கியுள்ள    குடும்பங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை
X

உதவிகள் கிடைக்காமல் முகாமில் தங்கியிருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் நிலையங்கள் நிரம்பி உள்ளன. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கோவிந்தாபுரம் ஏரி நிரம்பி அதனுடைய உபரி நீர் நியூடவுன் ஜார்ஜ்பேட்டை, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் புகுந்தது இடுப்பளவு தண்ணீர் வீடுகளில் தேங்கி நின்றது.

இதில் ஜார்ஜ் பேட்டையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள சுமார் 60 வீடுகளில் உள்ள குடும்பத்தினர்களை பகுதி மக்களை மீட்டு நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் நடுநிலையப்பள்ளி வளாகத்தில் தங்க வைத்தனர். மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான அத்தியவாசி பொருட்களை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்கள் ஆகியும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களை அரசு அதிகாரிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என யாரும் வந்து பார்க்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மேலும் பள்ளிகள் தொடங்கி உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் முகாமை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உள்ளது. அப்படி வெளியேற்றப்பட்டால் எங்கே போவது என தெரியவில்லை திகைத்துப் போய் நிற்கின்றனர்.

மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் நிரந்தரமாக இருக்க மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 23 Nov 2021 3:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!