Begin typing your search above and press return to search.
வாக்காளர்களுக்கு ஒன்றாக நன்றி தெரிவித்த ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர்
பாச்சல் ஊராட்சியில் வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் இருவரும் ஒன்றாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் கடந்த வாரம் 6 ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாச்சல் ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் மணிகண்டன் என்பவரும் பாமக சார்பில் பாச்சல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கவிதா திருப்பதி என்பவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாச்சல் ஊராட்சியில் ஒவ்வொரு வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு நன்றிகள் தெரிவித்தனர்.
அப்போது பொதுமக்கள் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டனுக்கும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருப்பதிக்கும் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.