/* */

வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலththai சீரமைக்கக்கோரி போராட்டம்

பாலாறு குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதை சீரமைக்கக்கோரி மாதனூர்  பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலththai சீரமைக்கக்கோரி போராட்டம்
X

தரைப்பாலத்தை சீரமைக்கக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாதனூர் வணிகர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் - உள்ளி இணைக்கக்கூடிய தரைப்பாலம் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது இதனால் குடியாத்தத்தில் இருந்து ஆம்பூர் மற்றும் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் செல்லக்கூடிய மாணவர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் 33 கிலோமீட்டர் மேலாக சுற்றி சொல்வதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்

தற்போது பாலாற்றில் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவதை தொடர்ந்து தற்காலிக பாலம் அமைத்து தரக்கோரி அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மாதனூர் பகுதியில் உள்ள வணிகர்கள் சுமார் 250க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின்னர் விரைந்து வந்த காவல்துறை பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

Updated On: 21 Dec 2021 2:33 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  5. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  9. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!