/* */

வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்

ஆம்பூர் வன சரகத்திற்கு வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்
X

ஆம்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டு ஊராட்சி காப்பு காட்டில் அதிகளவில் வனவிலங்குகள் உள்ளன. காப்புகாட்டையொட்டி வாணியம்பாடியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல காப்புக்காட்டில் ஜோலார்பேட்டை அடுத்த இடையம் பட்டியை சேர்ந்த பொக்லைன் இயந்திரத்தை வைத்து ஒருவர் சாலை அமைக்க மண் நிறுவும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வன சரகர் (பொறுப்பு) இளங்கோவன் மற்றும் வனத்துறையினர் உடனே அங்கு விரைந்து சென்றனர். அப்போது சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்த தப்பி ஓடினார்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் சதீஷ் கிடியோ உத்தரவின் பேரில் வனத்துறையினர் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் பொக்லைன் டிரைவர் சீனிவாசனை பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 March 2022 3:49 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!