Begin typing your search above and press return to search.
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய வாகனங்கள் பறிமுதல்
ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 23 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; காவல் துறையினர் வழக்கு பதிவு
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கொரோனா நோய்த் தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 23 இருசக்கர வாகனங்களை நகர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் தேவையின்றி வெளியில் சுற்றினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..