நெல்லையில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனம்: மேயர் துவக்கி வைப்பு
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை மேயர் பி.எம்.சரவணன் தலைமையேற்று, மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூரியன் எப்.எம். சார்பில் உலக புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை மேயர் பி.எம்.சரவணன் தலைமையேற்று ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் முன்னிலையில் துவக்கி வைத்தார். இந்த பிரச்சார வாகனம் இன்று (26-05-22 )முதல் 30-05-22 வரை ஆகிய 5 நாட்களுக்கு திருநெல்வேலி நகர்புற பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வலம்வர உள்ளது. புகையிலை பயனபடுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து சூரியன் எப்.எம். அறிவிப்பாளர்கள் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடையே எடுத்து கூற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் மரு.வி.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினரும் நியமனகுழு உறுப்பினருமான கோகிலவாணி, எப்.எம். நிலைய மேலாளர் முரளிபாபு, அறிவிப்பாளர்கள் வள்ளிமணவாளன், ஜெபராஜ், நிர்வாக பிரிவை சார்ந்த முத்துராமலிங்கம், விளம்பர பிரிவை சார்ந்த சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.