/* */

நெல்லையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நெல்லையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

கால்நடைகளை பாதுகாக்க மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கால்நடைகளை பாதுகாக்க வேண்டும். மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கால்நடைகளை பாதுகாக்கப்பட வேண்டும். வனத்துறை பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகளும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முகமது அலி கூறும்போது- தமிழகத்தில் வனத்துறை பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு காரணம் தமிழக அரசுதான். ஆகவே இந்த கால்நடைகளை வனத்துறை பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் கால்நடைகளை இல்லாத சூழ்நிலையில் மாறிவிடும் என தெரிவித்தார்.

Updated On: 28 April 2022 8:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்