/* */

நெல்லையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது கோடை மழை

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது கோடை மழை
X

நெல்லையில் இன்று கொட்டி தீர்த்தது கோடைமழை.

இலங்கை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று வழக்கம்போல் மாநகரில் பிற்பகல் வரை வெயில் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், இரவு திடீரென மாநகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம், தச்சநல்லூர், பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி, கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ச்சியாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவதன் மூலம் பொதுமக்களுக்கு கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 April 2022 2:40 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!