Begin typing your search above and press return to search.
தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா கொரோனாவால் மரணம்
தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான தாமிரா கொரோனாவால் மரணம் அடைந்தார்.
HIGHLIGHTS
தமிழ் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான தாமிரா, கொரோனாவால் மரணம் அடைந்தார்.
தொலைக்காட்சிகளில் திரைக்கதை, வசனம் எழுதிக்கொண்டிருந்த தாமிரா என்கிற காதர் மொகைதீன், பாலசந்தர், பாரதிராஜா ஆகியோரை வைத்து ஷங்கர் தயாரிப்பில் 'ரெட்டைசுழி'படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். இதையடுத்து சமுத்திரக்கனியை வைத்து 'ஆண் தேவதை' என்ற சினிமாவை எடுத்தார். நடிகர் சத்யராஜை வைத்து வெப் சீரிஸ் இயக்கி வந்தார்.
இந்நிலையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.