/* */

வள்ளியூர் அருகே விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் வர்ணம் தீட்டி விழிப்புணர்வு

கோவனேரி அருகே விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடையை வர்ணம் தீட்டி விழிப்புணர்வு செய்த வள்ளியூர் காவல் துறையினர்.

HIGHLIGHTS

வள்ளியூர் அருகே விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் வர்ணம் தீட்டி விழிப்புணர்வு
X

வள்ளியூர் பகுதிகளில் வேகத்தடை உள்ள இடங்களில் காவல் துறையினர் வர்ணம் பூசி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோவனேரி அருகே உள்ள அணுகு சாலையில் வேகத்தடை உள்ளது. வேகத்தடை இருப்பதை அறியாமல் வாகன ஓட்டிகளால் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீதுவிடம், வேகத்தடை இருப்பதை அறியாமல் விபத்து ஏற்படுகிறது என்று கோரிக்கை வைத்தனர். இதன்படி வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது,மற்றும் காவலர்கள் நம்பிராஜன்,சக்திவேல் ஆகியோர் சம்பவ இடம் சென்று வேகத்தடை இருப்பது அனைவருக்கும் தெரியும் வண்ணம் சாலையில் வர்ணம் பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் வள்ளியூர் பகுதிகளில் வேகத்தடை இருப்பதை தெரியும் வண்ணம் வேகத்தடை உள்ள இடங்களில் காவல் துறையினர் வர்ணம் பூசி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இச்செயலை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

Updated On: 15 Feb 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!