Begin typing your search above and press return to search.
நெல்லையில் சசிகலாவை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு
நெல்லையில் அமமுகவினர் சசிகலாவை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
நெல்லை வண்ணார் பேட்டையில் சசிகலாவை பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை பகுதி செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.