Begin typing your search above and press return to search.
மாவட்ட மைய நூலகத்தில் வாசகர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டையில் உள்ள பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து பொதுமக்களுக்கும், வாசகர்களுக்கும் கபசுர குடிநீரை வழங்கினார்கள். மேலும் கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார்கள். இந் நிகழ்வை மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். நன்நூலகர் முனைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.