/* */

திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரத்த தானம்

திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடந்த ரத்த தான முகாமில் 143 பேர் ரத்த தானம் செய்தனர்

HIGHLIGHTS

திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ரத்த தானம்
X
திருச்சியில் நடந்த ரத்த தான முகாமை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆர்.சி.ஆதிமூலம் பள்ளியில்தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமினை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தொடங்கிவைத்தார். இதில் 143 நிர்வாகிகள் ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் முரளி, மாணவரணி செயலாளர் சரண், பொருளாளர் பொன்னுசாமி, துணைத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் முருகதாஸ், இளைஞரணி செயலாளர் பாரத், இளைஞரணி தலைவர் நாகராஜன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரத்ததான முகாமினை தொடங்கி வைக்க வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிக்கும், பொதுமக்களுக்கும் பெரியார் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற புத்தகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பரிசாக வழங்கினர்.

Updated On: 18 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா