/* */

மணல் திருடி கொண்டு வந்த லோடு ஆட்டோ பறிமுதல்; இருவர் தப்பி ஓட்டம்.

திருச்சியில் ஆற்று மணல் திருடிக்கொண்டு வந்த லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

மணல் திருடி கொண்டு வந்த லோடு ஆட்டோ பறிமுதல்; இருவர் தப்பி ஓட்டம்.
X

பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள்

திருச்சி கிழக்கு தாலுகாவுக்கு உட்பட்ட சிந்தாமணி, தேவதானம் ஆகிய கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக கிரேசி மேரி (வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவரது எல்லைக்கு உட்பட்ட சஞ்சீவி நகர் பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது ஒரு லோடு ஆட்டோவில் சிலர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஆற்று மணலை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சஞ்சீவி நகரில் உள்ள ஒரு டீக்கடை முன்பு நின்று வாகனங்களை சோதனை செய்து வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு லோடு ஆட்டோவை நிறுத்திய போது, அதில் இருந்த இருவர் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். அந்த ஆட்டோவில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடத்தி வரப்பட்ட மணல் இருந்ததை கண்ட கிராம நிர்வாக அலுவலர் கிரேசி மேரி இதுகுறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து, ஆற்று மணலை கடத்தி வந்த மினி லோடு ஆட்டோவையும், அந்த ஆட்டோவை ஓட்டி வந்த கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார், கருணாகரன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்து இருவரையும் தேடி வருகின்றார்.

Updated On: 5 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்