Begin typing your search above and press return to search.
திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தலைமையில் நடந்தது.
HIGHLIGHTS
திருச்சியில் இன்று உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேரணியில் அவரும் கலந்து கொண்டு நடந்தே சென்றார். இந்த பேரணியில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமி, துணை இயக்குனர் சாந்தி, அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் நேரு, மாவட்ட காசநோய் அதிகாரி சாவித்திரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.