Begin typing your search above and press return to search.
எஸ்.எஸ்.ஐ. கொலை குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சி நவல்பட்டு போலீஸ் எஸ்.எஸ்.ஐ.யை கொலை செய்த குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி நவல்பட்டு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை படுகொலையை செய்தவர்களை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் தலைவர் பொன்.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.