திருட்டு செல்போன்களை மீட்ட போலீசாருக்கு திருச்சி காவல் ஆணையர் பாராட்டு
திருட்டு செல்போன்களை மீட்ட போலீசாருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார்.
HIGHLIGHTS
திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். உணவக ஊழியர்.சம்பவத்தன்று இவர் ஒரு டீ கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர்.
இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி இரவு நேர காவல் பணியில் இருந்த போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், தலைமை காவலர்கள் டேவிட்சாலமன், செந்தில், ஜோசப் சகாயராஜ் ஆகியோர அங்கு ஒரு பயணியிடம் செல்போன் வழிப்பறி செய்து கொண்டு தப்பி ஓட முயன்றபோது2பேரை வளைத்து பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 4திருட்டு செல்போன்கள் மீட்கப்பட்டது. விக்னேஷ்வரன், அஜெய்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இரவு நேர ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்டு செல்போன்களை மீட்ட 4 போலீசாருக்கும் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டு நற்சான்றிதழ் வழங்கினார்.