/* */

திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த  3 பேர் கைது
X

திருச்சி மாநகர் அரியமங்கலம் திடீர் நகர், கோல்டன் நகர் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், போதை மாத்திரைகளை விற்ற 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருச்சி வரகனேரி சந்தானபுரம் அசன்அலி (வயது 22), சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் தெருவை சேர்ந்த அகஸ்தியர் (வயது 22), அரியமங்கலம் காமராஜர் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த முஷரப் (வயது 20) என்பதும், இவர்கள் அந்த பகுதிகளில் சிறுவர்களிடம் போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வி.ஏ.ஓ. சூசை ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 27 Feb 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை