/* */

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்டதால் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மறித்து கிருஷ்ணகுமார் (வயது 22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான கிருஷ்ணகுமார் மீது திருச்சி பாலக்கரை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கிருஷ்ணகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமாரிடம் வழங்கப்பட்டது.

Updated On: 3 Dec 2021 11:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  5. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  7. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  9. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  10. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!