/* */

திருச்சி கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மலைக்கோட்டை பகுதி கடைவீதிகளில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

HIGHLIGHTS

திருச்சி கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை  அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
X
திருச்சி கடைவீதி பகுதி.

திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் அமைந்துள்ள பர்மா பஜார் பெட்டிக்கடைகள் மாநகராட்சியால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 8 அடி முதல் 12 அடி வரை ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். அதே போல மலைவாசல் எதிரில், சின்னகடைவீதி, பெரியகடை வீதி சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளுக்கு முன்பு சுமார் 3 அடி முதல் 8 அடி வரை ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதிகளில் சைக்கிள், தள்ளுவண்டி பழக்கடைகள், ஆட்டோக்கள் நடுரோட்டில் நின்று கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோட்டை நுழைவு வாயில் பகுதியில் உள்ள கடைகள் அவர்களுக்கு உண்டான இடத்தையும் தாண்டி ரோட்டில் மக்கள் செல்ல முடியாதவாறு கடைகளை ரோட்டை ஆக்கிரமித்து போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிபடுகின்றனர். அந்த பகுதியில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது.

இதனால் என்.எஸ்.பி ரோட்டில் எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஆகவும், பொதுமக்கள் நடந்து செல்ல இயலாமல் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த கொரோனா நோய் தொற்று பரவும் நேரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் சமூக இடைவெளி இன்றி மக்கள் நடமாட வேண்டியுள்ளது. இதனால் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. இதற்கு நல்ல தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சரி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 16 Dec 2021 12:34 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?