/* */

திருச்சியில் தீபாவளி தரைக்கடைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்

திருச்சியில் தீபாவளி தரைக்கடைக்கு விண்ணப்பம் செய்ய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சியில் தீபாவளி தரைக்கடைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்
X
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைத்திட விரும்புவோர் வருகின்ற 12.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், திருச்சி கிழக்கு வட்டம், திருச்சி டவுன் கிராமம், வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடைகள் அமைப்பது தொடர்பாக குற்றங்குறைகளற்ற திட்டவட்டமான ஒழுங்குமுறை உடைய தெளிவான நடைமுறைகள் சென்ற ஆண்டு பின்பற்றப்பட்டது போல் நடப்பு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இது ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் உள்ள திட்டமாகும். இது புதிய திட்டமல்ல. டவுன் ஹால் மைதானத்தில் பின்வரும் விவரப்படி அ, ஆ, இ பகுதி என பாகுபாடு செய்யப்பட்டு "அ" பகுதியில் 80 சதுர அடி கொண்ட 37 தரைக்கடைகளும், "ஆ" பகுதியில் 80 சதுர அடி கொண்ட 19 தரைக்கடைகளும் "இ" பகுதியில் 80 சதுர அடி கொண்;ட 24 தரைக்கடைகளும் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடை ஒவ்வொன்றும் அனுமதி வழங்கப்படும் நாளிலிருந்து தீபாவளி பண்டிகை முடிவுறும் வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும்.

'அ' பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ---- ரூ.6500

'ஆ' பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ---- ரூ.5500

'இ' பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ---- ரூ.4500

தரைக்கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் எந்தப் பிரிவு தரைக்கடை வேண்டுமோ அதைத் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அதற்கான கட்டணத் தொகையை வருவாய் கோட்டாட்சியர், திருச்சிராப்பள்ளி என்ற பெயரில் வங்கி கேட்பு காசோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியரிடம் 12.10.2022 பிற்பகல் 05.45 மணிக்குள் சேர்க்க வேண்டும்.

தரைக்கடைகள் எண்ணிக்கையைவிட மனு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில் "அ" பிரிவுக்கு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும். அதில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் "ஆ" பிரிவுடன் சேர்ந்து குலுக்கல் நடைபெறும். "ஆ" பிரிவில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் "இ" பிரிவில் சேர்ந்து குலுக்கல் நடத்தப்படும்.

மேற்படி குலுக்கல் நகர வர்த்தக குழு பிரதிநிதிகள் மாவட்ட உபயோகிப்பாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி, வருவாய் கோட்டாட்சியரால் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 14.10.2022 அன்று காலை 11.00 மணிக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Oct 2022 1:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!