/* */

குடியரசு தின நாளில் விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குடியரசு தின விடுமுறை நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குடியரசு தின நாளில்  விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
X

பைல் படம்.

திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தங்கராசு தலைமையில், தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் நேற்று விடுமுறை தினமான குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 147 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 104 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் தேசிய விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும். தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காமல் பணிபுரிய நிர்ப்பந்திக்கும் வர்த்தக நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை) சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தங்கராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Jan 2022 6:17 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்