/* */

திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு

திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சமூக நீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
X

திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சமூக நீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. அப்போது சமூகநீதி பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் வந்து ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை ரவுண்டானா முதல் துவாக்குடி வரை சாலையின் இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக அன்றாடம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இதில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் உடல் உறுப்புகளை இழந்து தவிக்கிறார்கள். சமீபத்தில் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது .

அதேபோன்று அந்த சாலையின் இரு மருங்கிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும் பழைய பால்பண்ணை அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

Updated On: 18 April 2022 8:35 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை