/* */

அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு அனுமதி வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு அனுமதி வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு அனுமதி வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
X

விமன் இந்தியா மூமெண்ட்ஸ் அமைப்பினர் மனு அளிக்க வந்தனர்.

விமன் இந்தியா மூமென்ட்ஸ் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது. இந்த அமைப்பின் மாவட்ட தலைவர் மூமினாபேகம் தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சியில் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆங்கில வழிக் கல்வி அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் பலனாக அங்கு பயின்ற மாணவ மாணவிகள் 2019ஆம் ஆண்டு வரை இரண்டு பேட்ச் முடித்து சென்றனர். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக இருந்தவர் போதிய ஆசிரியர்கள் இல்லை என காரணம் கூறி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வகுப்பு களுக்கான ஆங்கில வழிக் கல்வியை ரத்து செய்துவிட்டார். இதனால் அங்கு மாணவிகள் ஆங்கில வழி கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் முதல் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை .ஆதலால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மீண்டும் இந்த பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை தொடர அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Updated On: 10 May 2022 12:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு