/* */

திருச்சி நகை கடையில் 3 தங்க செயின்களை எடுத்து கொண்டு ஓடியவருக்கு வலைவீச்சு

திருச்சி அருகே நகை கடையில் இருந்த 3 தங்க செயின்களை எடுத்து கொண்டு தப்பியோடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி நகை கடையில் 3 தங்க செயின்களை எடுத்து கொண்டு ஓடியவருக்கு வலைவீச்சு
X

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை கடைவீதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான மீனாட்சி ஜூவல்லரி என்ற நகை கடை உள்ளது. இந்த கடையில் நேற்று இரவு சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் கோல்ட் காயின் வாங்குவதற்காக நகைகடைக்கு வந்துள்ளார். தங்க காசு வாங்கி கொண்டு அதற்குரிய பணத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்று கொண்டு உரிய கல்லா பெட்டியில் வைக்கும் நேரத்தில் கடையில் இருந்த 3 தங்க செயின்களை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் கடையிலிருந்து வெளியேறி ரயில்வே டிராக் வழியாக தப்பியோடிவிட்டார். தப்பியோடியவர் பச்சைகலர் முழுகைசட்டையும், கருப்பு கலர் பேண்டும் அணிந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நகைகடை உரிமையாளர் மனோகரன் (வயது 56) பெட்டவாய்த்தலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது..

Updated On: 10 Dec 2021 1:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...