/* */

ஜல்லிக்கட்டு காளைக்கு ஈட்டி குத்து- தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளையினை ஈட்டியால் குத்தியதை தட்டிக் கேட்ட காளை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டு காளைக்கு ஈட்டி குத்து- தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
X

ஜல்லிக்கட்டு காளை (பைல் படம்)

திருச்சி மாவட்டம், சமயபுரம் கீழ ஈச்சம்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஜான் என்பவர் சொந்தமாக நான்கு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஜல்லிக்கட்டு காளை திமிலில் ஈட்டியால் குத்தி ரத்தம் வழிகிறதென அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். உடனே அவரது வீட்டின் தோட்டத்து பகுதியில் சென்று பார்த்த போது, ஜல்லிக்கட்டு காளை திமிலில் ஈட்டி பாய்ந்திருப்பதனைக் கண்டு ஜான் அதிர்ச்சி அடைந்தார்.

தனது காளையினை ஈட்டியால் குத்திய அடையாளம் தெரியாத நபரை ஆத்திரத்தில் திட்டியுள்ளார் ஜான் தம்பி ஜான்சன். இதையறிந்த கஞ்சா போதையிலிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரெங்கராஜ் மகன் சந்தோஷ் என்ற 29 வயதான இளைஞர், ஜான்சனை தலையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார்.

படுகாயமடைந்த ஜான்சன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே வேளையில் ஈட்டியால் குத்தியதில் காயமடைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு அப்பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

Updated On: 5 Jan 2022 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது