/* */

திருச்சியில் 2 வழிப்பறி ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருச்சியில் 2 வழிப்பறி ரவுடிகள் மீது கமிஷனர் உத்தரபுபடி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் 2 வழிப்பறி ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
X

திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் ஆஞ்சநேயர் அருகில் ஒரு பெட்டிக்கடை உள்ளது. இந்தப் பெட்டி கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்கிற குண்டுமணி (வயது 27), அய்யப்ப மணிகண்டன் (வயது 27) ஆகியோர் ரூ. 1100 வழிப்பறி செய்து கொண்டு ஓடினர் .

இதுபற்றி அளித்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ரவுடிகள் இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதால் அவர்கள் மீண்டும் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடம் எந்தவித விசாரணையுமின்றி சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினேஷ் மற்றும் அய்யப்ப மணிகண்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 19 April 2022 2:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது