Begin typing your search above and press return to search.
திருச்சியில் சுடுதண்ணீர் மேலே கொட்டியதால் காயம் பட்ட மூதாட்டி சாவு
திருச்சியில் சுடுதண்ணீர் மேலே கொட்டியதில் காயம்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
HIGHLIGHTS
திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்தவர் பரமன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று தான் குளிப்பதற்காக சுடுதண்ணீர் எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றுள்ளார்.
அப்போது கால் இடறி கீழே விழுந்த வீரம்மாள் மீது சுடுதண்ணீர் கொட்டியது. இதில் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வீரம்மாள் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.