/* */

திருச்சியில் குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

திருச்சியில் குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் குடிபோதை தகராறில் நண்பரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
X

திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை மேலகிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 50). இவரது நண்பர் அதே பகுதி மதுரை வீரன் தெருவை சேர்ந்தவர் மணி(எ)சுப்ரமணி (வயது 52). இருவரும் கூலித்தொழிலாளர்கள். இதில் சம்பவத்தன்று இரவு மது போதையில் இருந்த இருவரும் அப்பகுதியில் உள்ள அரிசி கடை முன் பிளாட்பாரத்தில் உறங்க சென்றனர்.

அப்போது இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி கைகலப்பானது. அப்போது மணி மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் முத்துகுமாரை குத்தினார். இதில் இடப்புற தலையில் காயமடைந்த முத்துகுமார், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மணியை கைது செய்தார்.

Updated On: 24 Nov 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’