Begin typing your search above and press return to search.
திருச்சியில் பிளஸ்- 2 தேர்வு மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு
திருச்சியில் பிளஸ்- 2 தேர்வு நடந்து வரும் மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டத்தில் இன்று 126 மையங்களில் பிளஸ்2 தேர்வு நடந்து வருகிறது. திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 33121 மாணவ மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று திருச்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.