/* */

திருச்சியில் தந்தையால் ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு

திருச்சியில் தந்தையால் ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் மீட்டு 4 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் தந்தையால் ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்பு
X

திருச்சியில் ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.

திருச்சி காந்திபுரம் தேவர் காலனி பகுதியை சேர்ந்தவர் அப்துல்சலாம். இவரது மனைவி கைருன்னிஷா. இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு 5-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கூலி தொழிலாளியான அப்துல்சலாம் சரிவர எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்கள், உறவினர்களிடம் கடனாக பணத்தை பெற்று சூதாடி வந்துள்ளார்.

அந்த வகையில் ஆரோக்கியராஜ் என்பவரிடம் ரூ. 25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனை ஈடுகட்ட ஆரோக்கியராஜ் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு குழந்தை இல்லாததால் தற்போது புதிதாக பிறந்த குழந்தையை தர வேண்டும் என்றும், கூடுதலாக ரூ.25 ஆயிரம் தருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அப்துல்சலாம் கைருன்னிஷாவிடம் பேசி சமாதானம் செய்து மனதை மாற்றி கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையை ஆரோக்கியராஜிடம் கொடுத்து பணத்தையும் பெற்றுள்ளார்.

பின்னர் தற்போது திடீரென கைருன்னிஷா தன்னுடைய குழந்தையை மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்று அப்துல் சலாமிடம் கேட்க, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கைருன்னிஷா உறையூர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்ற மகனை ரூ. 50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை அப்துல்சலாம், அந்த குழந்தையை வாங்கிய ஆரோக்கியராஜ் மற்றும் அவருடைய உறவினரான பொன்னர் மற்றும் சந்தான மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

Updated On: 24 Jan 2022 2:38 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்