/* */

5 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான பொட்டலங்களை 2 பேர் எடுத்து சென்றதை கண்டவுடன், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

HIGHLIGHTS

5 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகள்.

திருச்சி போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான பொட்டலங்களை 2 பேர் எடுத்து சென்றதை கண்டவுடன், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதனையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சா பொட்டலங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.

பின்னர் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்தபோது 5 கிலோ இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், பிரசாந்த் என்பது தெரிய வந்தது. பிரசாந்த் மற்றும் மணிகண்டன் மீது ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தப்பிய ஓடிய இருவரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

Updated On: 27 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்