/* */

5 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான பொட்டலங்களை 2 பேர் எடுத்து சென்றதை கண்டவுடன், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

HIGHLIGHTS

5 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பாக்கெட்டுகள்.

திருச்சி போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான பொட்டலங்களை 2 பேர் எடுத்து சென்றதை கண்டவுடன், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதனையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சா பொட்டலங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களை துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.

பின்னர் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோதனை செய்தபோது 5 கிலோ இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், பிரசாந்த் என்பது தெரிய வந்தது. பிரசாந்த் மற்றும் மணிகண்டன் மீது ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தப்பிய ஓடிய இருவரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

Updated On: 27 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’